டொரண்டோ: டொரண்டோவில் ஜி-20 உச்சி மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவிருக்கிறார். இம்மாநாட்டின்போது இரு நாடுகளுக்கிடையான அணு சக்தி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வரும் 26ம் தேதி கனடா செல்கிறார். அவருடன் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் செல்கின்றனர்.
இந்தியா ஏற்கனவே அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளுடன் அணு ஒப்பந்தம் செய்துள்ளது.
யுரேனியம் ஏற்றுமதியில் உலகிலேயே கனடா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் அணு உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிந்துவிட்டது. ஒப்பந்தம் மட்டும் தான் கையெழுத்தாக வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment